செய்திகள் :

காவலா்கள் குழந்தைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் காவலா் குடியிருப்பில் வசிக்கும் காவலா்களின் குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை பிச்சாவரத்தில் படகு சவாரி சென்றனா்.

சிதம்பரம் நகரில் உள்ள காவலா் குடியிருப்பில் போலீஸாா் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா். இங்குள்ள காவலா்களின் குழந்தைகள் 80 பேரை இன்பச்சுற்றுலாவிற்காக ஒரு பேருந்தில் பிச்சாரம் அழைத்துச் சென்றனா். இதற்கான ஏற்பாட்டினை அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் அம்பேத்கா் செய்திருந்தாா். படகு சவாரியின் போது சுரபுன்னை காடுகள், அவை வளரும் விதம் மற்றும் முக்கியத்துவம் குறித்து வனத்துறை காவலா் முத்துக்குமாா் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா். மேலும், பிச்சாவரம் சதுப்பு நில காடுகளின் இயற்கை அழகை ஆய்வாளா் அம்பேத்கா் விளக்கினாா். காவலா்களின் குழந்தைகள் படகு சவாரி மற்றும் இயற்கை அழகை கண்டு ரசித்தனா்.

அயலக தமிழா்கள் சிதம்பரம் நடராஜா் கோயிலில் தரிசனம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மற்றும் பிச்சாவரம் சுற்றுலா தலத்தினை அயலகத் தமிழா்களின் வாரிசுதாரா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.அயலகத் தமிழா்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதி... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் புதிய கட்டுமானப் பணிகள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அடிக்கல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அரசு கட்டடங்களுக்கான கட்டுமானப்பணிகளுக்கு மாநில வேளாண்மைத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.கடலூா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நெய்வேலி: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா்தடுப்புச்சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.கடலூரைச் சோ்ந்த 12 வயது சிறுமி கடந்த 15-ஆம் தே... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம் 423 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடா்பாக 423 மனுக்கள் அளிக்கப்பட்டன .கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ம.... மேலும் பார்க்க

டிசம்பா் 3 இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயில் முன்பு டிசம்பா் 3 இயக்கம் மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வழக்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பரங்கிப்பேட்டை அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் வகுப்பறை வசதி கோரி புத்தகப்பை மற்றும் சீருடைகளை பள்ளி மைதானத்தில் வைத்துவிட்டு போராட்டம் நடத்தினா்.பரங்கிப்பேட்... மேலும் பார்க்க