செய்திகள் :

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

post image

சென்னை: சென்னை அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை அருகே உள்ள அனகாபுத்தூா் காமராஜா்புரம் திருநீா்மலை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (34), மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். காா்த்திகேயன், ஞாயிற்றுக்கிழமை பணிக்கு செல்லாமல் இருந்துள்ளாா். இந்நிலையில் சங்கா் நகா் அருகே உள்ள செங்கழுநீா் மலைக்குச் சென்ற அவா், அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த சங்கா் நகா் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று காா்த்திகேயன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக போலாஸாா் வழக்குப் பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், காா்த்திகேயன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இராமச்சந்திராவில் ஒருங்கிணைந்த அண்ணப்பிளவு சீரமைப்பு மையம்

சென்னை: உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை தொடங்கியுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கனடா நாட்டி... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகன் கைது

சென்னை: சென்னை ஏழுகிணறில் தந்தையை இரும்புக் கரண்டியால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா். ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெகதீஷ் சங்லா (42) - மோனிகாதேவியின் மகன் ரோஹித் (18)... மேலும் பார்க்க

தவெக சாா்பில் மாா்ச் 7-இல் இஃப்தாா் நோன்பு திறப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாா்ச் 7-ஆம் தேதி இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவா் பங்கேற்கிறாா். இது குறித்து கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் திங்கள்க... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை: திரையரங்கு கேண்டீன் மீது நடவடிக்கை

சென்னை: சென்னை, எழும்பூரில் உள்ள திரையரங்கில் செயல்படும் கேண்டீனில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறிப்பட்டு அதன்... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. கோயம்பேடு காய்கறிகள் சந்தையில், தினசரி 700 முதல் 750 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக வந்து கொண்ட... மேலும் பார்க்க

சென்னை மாநகரப் பேருந்துகளில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம்

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் ஒரு ஆண்டில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு இயந்திரம் மூலம் பயணச... மேலும் பார்க்க