செய்திகள் :

காவல் துறை ஆலோசனையை புறக்கணித்து அவசர கதியில் நடத்தப்பட்டதா வெற்றிப் பேரணி?

post image

காவல் துறையின் ஆலோசனையை புறக்கணித்துவிட்டு அவசர கதியில் வெற்றிப் பேரணி நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பெங்களூரு அணி முதல்முறையாக ஐபில் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில், கர்நாடக பேரவை வளாகத்துக்கு முன்னர் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடியதாலும், சின்னசாமி திடலில் ஆரவாரத்துடன் அத்துமீறி நுழைய முயன்ற ரசிகர்களை தடுத்த காவல் துறை தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதில் லேசான தடியடி நடத்தப்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி, ஒன்றுமறியாத 11 பேர் பரிதாபமாக பலியாகியிருக்கின்றனர்.

இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவசர அவசரமாக பாராட்டு விழாவுக்கு அனுமதியளித்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை இறுதிப்போட்டி நடைபெற்றது. பெங்களூரு அணி வெற்றிபெற்றதும் கர்நாடக அரசு புதன்கிழமை பாராட்டு விழா மற்றும் பேரணிக்கு ஏற்பாடுகளைத் தொடர்ந்தது.

இரவில் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் தீபாவளி போல தொடர்ந்ததால் போலீஸார் கண் விழித்துப் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி பாதுகாப்புப் பணிகள் ஜூன் 4 ஆம் தேதி இரவு வரை இருந்தது.

இதனால், பாராட்டு விழாவை ஞாயிற்றுக்கிழமையான ஜூன் 8 ஆம் தேதி நடத்திக் கொள்ள காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை கர்நாடக அரசு முற்றிலுமாக மறுத்துவிட்டு அவசர கதியில் நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலை நாள் அல்லாத ஞாயிற்றுக்கிழமையில் பாராட்டு விழா நடத்தினால், முறையான ஏற்பாடுகளை நடத்துவதற்கும், தடுப்புகள் அமைத்து போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் இருக்கும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏராளமான பிரச்சினைகள் இருந்தபோதிலும், பாராட்டு விழா நடத்துவதிலேயே கர்நாடக அரசு உறுதியாக இருந்துள்ளது. இதுவே பல்வேறு உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ளது.

இதையும் படிக்க | பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க