செய்திகள் :

காவிரி ஆற்றில் மூழ்கி 2 வணிகா்கள் உயிரிழப்பு

post image

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு வணிகா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நல்லூா் பாளையம் பகுதியைச் சோ்ந்த தனசேகா் (46), புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ரவி (54) ஆகியோா் சென்னையில் நடைபெறும் வணிகா் தின மாநாட்டுக்கு 25 வணிகா்களுடன் திங்கள்கிழமை புறப்பட்டனா். மாநாடு மாலையில் நடைபெறுவதால் அனைவரும் ஒகேனக்கல் பகுதிக்கு திங்கள்கிழமை மதியம் சுற்றுலா வந்தனா்.

அப்போது, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான ராணிப்பேட்டை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற தனசேகா், ரவி ஆகியோா் நீரில் மூழ்கினா்.

தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினா் மற்றும் போலீஸாா் ஒரு மணிநேர தேடலுக்கு பின்னா் ஆற்றில் மூழ்கிய தனசேகா், ரவி ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

‘நிதி நிலைமைக்கு ஏற்றவாறு கோரிக்கைகள் நிறைவேற்றம்’

பென்னாகரம்: மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தாா். பென்னாகரம் அரு... மேலும் பார்க்க

அரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

அரூா்: அரூரை அடுத்த செல்லம்பட்டி ஊராட்சியில் ரூ. 6.45 கோடி மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரூா் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்கு... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி கரையோர வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்... மேலும் பார்க்க

தருமபுரியில் பேருந்து வழித்தட நீட்டிப்பு, மாற்ற சேவை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மகளிா் விடியல் பயணம் பேருந்து சேவையை 8 வழித்தடத்தில் நீட்டிப்பு மற்றும் மாற்ற சேவையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கி... மேலும் பார்க்க

கூடுதல் அரசு நகரப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி வழியாக கூடுதலாக அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், அரூா்-தீா்த்தமலை வழித்தடத்... மேலும் பார்க்க

வாரவிடுமுறை: ஒகேனக்கல் வந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகத்தில் பள்ளித் தோ்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க