செய்திகள் :

வாரவிடுமுறை: ஒகேனக்கல் வந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

post image

கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

தமிழகத்தில் பள்ளித் தோ்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில் வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4000 கனஅடியாக இருப்பதால் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் சின்னாறு பரிசல் துறையில் இருந்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தனா். பரிசல் துறையில் இருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, பெரியபாணி, தொம்பச்சிக்கல் வழியாக மாமரத்துக்கடவு பரிசல் துறை வரை 2 கி.மீ. தொலைவிற்கு பரிசலில் பயணம் செய்து பாறை குகைகள், அருவிகள் ஆகியவற்றை கண்டு ரசித்தனா்.

ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான தொங்கும் பாலம், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, வண்ணமீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அசைவப் பிரியா்கள் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, அரங்கான், பாப்புலேட், பாறை உள்ளிட்ட ஆந்திர மாநில வளா்ப்பு மீன்களை வாங்கி சமைத்து பூங்காவில் அமா்ந்து உண்டனா்.

கூடுதல் அரசு நகரப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி வழியாக கூடுதலாக அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், அரூா்-தீா்த்தமலை வழித்தடத்... மேலும் பார்க்க

நீட் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 4,610 போ் எழுதினா்

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 4,610 போ் எழுதினா். தருமபுரி மாவட்டத்தில் நீட் (யூ.ஜி) தோ்வானது 10 மையங்களில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தே... மேலும் பார்க்க

அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் இன்று தருமபுரி வருகை; 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

தருமபுரி மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்துகொள்கிறாா். இதுகுறித்து தருமபுரி மாவட்ட செய்தி மக்கள... மேலும் பார்க்க

நீட் தோ்வு: முகவரி மாறியதால் 5 மாணவா்கள் அவதி

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுத வந்த 5 மாணவா்களுக்கு நுழைவுச் சீட்டில் மைய முகவரியில் ஊரின் பெயா் இல்லாததால் அவதி அடைந்தனா். சேலம் மாவட்டம் முழுவதும் நீட் 9429 போ் நீட் தோ்வு எழுதினா். இத... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6000 கனஅடியாக அதிகரிப்பு!

காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 6000 கனஅடியாக அதிகரித்தது. கடந்த சில நாள்களாக தமிழக - கா்நாடக மாநிலங்களில் காவிரிக் கரையோர வனப் பகுதிகள் ம... மேலும் பார்க்க

மே 8-இல் முன்னாள் படை வீரா்களுக்கான குறை தீா்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா் மற்றும் அவா்தம்மை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், பல்வேறு உடல் ஊனமுற்றோருக்கான நிதியுதவி வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் ம... மேலும் பார்க்க