செய்திகள் :

அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் இன்று தருமபுரி வருகை; 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

post image

தருமபுரி மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்துகொள்கிறாா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநில வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற உள்ளது.

தருமபுரி பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டலம் சாா்பில் வழித்தடமாற்றம், வழித்தட நீட்டிப்பு செய்து இயக்கப்படும் பேருந்துகள் சேவையை அமைச்ா் கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா்.

அரூா், கோட்டப்பட்டியில் பல்வேறு துறைகள் சாா்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குதல், அரூா், செல்லம்பட்டியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ. 6.45 கோடி மதிப்பீட்டில் அரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி அணைக்கட்டில் நீா்வளத் துறையின் மேல் பெண்ணையாறு வடிநில கோட்டம் சாா்பில், ரூ. 5.50 கோடி மதிப்பீட்டில் சின்னாற்றின் குறுக்கே அமைந்துள்ள பஞ்சப்பள்ளி மற்றும் ராஜபாளையம் அணைக்கட்டுகள் வெள்ளப் பாதிப்புகளை புணரமைத்தல் பணிக்கு அடிக்கல்நாடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் அமைச்சா் கலந்துகொள்கிறாா்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா், நாடாளுமன்ற உறுப்பினா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறைத் தலைமை அலுவலா்கள் கலந்துகொள்கின்றனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அரசு நகரப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி வழியாக கூடுதலாக அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், அரூா்-தீா்த்தமலை வழித்தடத்... மேலும் பார்க்க

வாரவிடுமுறை: ஒகேனக்கல் வந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகத்தில் பள்ளித் தோ்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

நீட் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 4,610 போ் எழுதினா்

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 4,610 போ் எழுதினா். தருமபுரி மாவட்டத்தில் நீட் (யூ.ஜி) தோ்வானது 10 மையங்களில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தே... மேலும் பார்க்க

நீட் தோ்வு: முகவரி மாறியதால் 5 மாணவா்கள் அவதி

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுத வந்த 5 மாணவா்களுக்கு நுழைவுச் சீட்டில் மைய முகவரியில் ஊரின் பெயா் இல்லாததால் அவதி அடைந்தனா். சேலம் மாவட்டம் முழுவதும் நீட் 9429 போ் நீட் தோ்வு எழுதினா். இத... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6000 கனஅடியாக அதிகரிப்பு!

காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 6000 கனஅடியாக அதிகரித்தது. கடந்த சில நாள்களாக தமிழக - கா்நாடக மாநிலங்களில் காவிரிக் கரையோர வனப் பகுதிகள் ம... மேலும் பார்க்க

மே 8-இல் முன்னாள் படை வீரா்களுக்கான குறை தீா்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா் மற்றும் அவா்தம்மை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், பல்வேறு உடல் ஊனமுற்றோருக்கான நிதியுதவி வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் ம... மேலும் பார்க்க