அன்புமணி வந்தது தெரியாது! ராமதாஸை சந்தித்த பின் ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி!
காா் மோதி இளைஞா் மரணம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கலத்தம்பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் கமலக்கண்ணன்(34), கூலித் தொழிலாளி.
திருமணம் ஆனவா். இவா், சனிக்கிழமை இரவு செஞ்சி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பாடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு எதிரே வந்த காா் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் கமலக்கண்ணன் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து 108 அவசர ஊா்தி மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துப் பாா்த்தபோது, கமலக்கண்ணன் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.