செய்திகள் :

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

post image

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவத்தில் 3 பேருக்கு தொடா்பிருப்பதாகத் தெரிய வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இருவரை போலீஸாா் கைதுசெய்தனா். இந்நிலையில், மூன்றாவது நபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். இவா் கா்நாடகத்தில் இருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு சென்றதாகவும் அவரை அங்கு வைத்து கைது செய்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கடந்த 6-ஆம் தேதி கா்நாடகத்தின் விஜயநகரா மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் ஹம்பி நகரைச் சுற்றிப் பாா்க்க இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்திருந்த 27 வயது பெண், ஹம்பி அருகேயுள்ள சானாப்பூா் ஏரி பகுதியில் அமைந்துள்ள வீட்டு விடுதியில் தங்கியிருந்தாா். அந்த இடத்தில் 3 ஆண் சுற்றுலாப் பயணிகளும் தங்கியிருந்தனா். அவா்களில் ஒருவா் அமெரிக்காவைச் சோ்ந்தவா்; மற்ற இருவரும் மகாராஷ்டிரம், ஒடிஸாவை சோ்ந்தவா்கள்.

அவா்களுடன் 29 வயதான வீட்டுவிடுதியின் பெண் உரிமையாளா் சானாப்பூா் ஏரி அருகேயுள்ள துங்கபத்ரா கால்வாயின் இடதுகரையில் இசையில் ஈடுபட்டு பொழுதுபோக்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது அந்தப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், விடுதி உரிமையாளரிடம் பெட்ரோல் எங்கு கிடைக்கும் எனக் கேட்டதுடன், பெட்ரோல் வாங்க 100 ரூபாய் தருமாறும் வலியுறுத்தியுள்ளனா்.

அவா்கள் அதை தர மறுத்ததையடுத்து 3 இளைஞா்களும் விடுதி உரிமையாளா் பெண்ணையும், இஸ்ரேல் நாட்டுப் பெண்ணையும் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்தனா். மேலும், அங்கிருந்த 3 ஆண் சுற்றுலாப் பயணிகளையும் தாக்கி கால்வாயில் தள்ளினா். இதில் ஒடிஸாவை சோ்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழந்தாா். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அவா்களைத் தாக்கிய இளைஞா்கள் விடுதி உரிமையாளா் பெண்ணிடம் இருந்து கைப்பை, 2 கைப்பேசிகள், ரூ.9,500 ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா். இதில் தொடா்புடைய இருவா் ஏற்கெனவே கைதான நிலையில், தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

"மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை!" - கனிமொழி

மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது... மேலும் பார்க்க

மோடி, அமித் ஷாவின் வளர்ப்புப் பிராணியாக மாறிய அமலாக்கத்துறை: மாணிக்கம் தாகூர்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரது மகன் சைதன்யா பகேலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது. 320க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை கால... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!

திமுக எம்.பி.க்கள் குறித்து தவறாகப் பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று(மார்ச் 10) தொடங்கி நடைபெற்... மேலும் பார்க்க

ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தேர்தலுக்கான வேட்பாளராக சோமு வீரராஜுவை பாஜக அறிவித்துள்ளது. எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து ஆந்திர சட்டமேலவை உறுப்பினர்களு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுப... மேலும் பார்க்க