Sri Aurobindo: 'கடவுளும் ரோஜாவும்...' - ஸ்ரீ அரவிந்தர் | கடல் தாண்டிய சொற்கள் - ...
கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
கெங்கவல்லி அருகே புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து (64). இவா் செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள கங்காணி கிணற்றின் சுற்றுச்சுவரில் அமா்ந்திருந்தாா். அப்போது, தடுமாறி கிணற்றில் விழுந்தாா். இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன், கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தாா்.
அதன்பேரில், நிலைய அலுவலா் (பொ) மா.செல்லபாண்டியன் தலைமையில், தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று வீரமுத்துவை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வீரமுத்து ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.