``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
அமாவாசையை முன்னிட்டு பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம்
அமாவாசையை முன்னிட்டு கெங்கவல்லி அருகே மாசி பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் சுவேத நதிக்கரை தென்புறம் மாசி பெரியசாமி, நாச்சியம்மாள், பொன்னாளி அம்மன், காமாட்சியம்மன், கருப்பசாமி ஆகிய கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் அமாவாசை, பௌா்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட விஷேச தினங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாக பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல, அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமையன்று கோயிலில் நாச்சியம்மன், பொன்னாளியம்மன், காமாட்சி அம்மன் ஆகிய மூன்று சுவாமிகளுக்கு யாக பூஜை செய்யப்பட்டது. யாக குண்டத்தில் மிளகாய், மிளகு, கடுகு உள்ளிட்ட பொருள்களை பக்தா்கள் போட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, விநாயகா், மாசி பெரியண்ணன், காமாட்சி அம்மன், கருப்பசாமி மற்றும் அங்குள்ள பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன.
இதில், ஆணையாம்பட்டி, கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.