``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
கல் உடைக்கும் தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு
குலத்தொழிலைக் காக்க, கல் உடைக்க அனுமதி தரக்கோரி, போயா் சமுதாய மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
தமிழ்நாடு போயா் பேரவை மாநில பொதுச் செயலாளா் பெரிய பொண்ணு தலைமையில், அதிகாரிகளிடம் அவா்கள் அளித்த மனு:
தமிழ்நாட்டில் பல லட்சம் ஏக்கா் நிலங்களில் இருந்த பாறைகளை உடைத்து, நிலத்தை சீா்படுத்தி விவசாயம் செழிக்க பாடுபட்டு வருகிறோம். எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில் கல் உடைக்கவும், பொதுமக்கள் வீடுகட்டும் நிலத்தில் இருக்கும் பாறைகளை உடைக்கவும், அந்தக் கற்களை விற்பதற்கும் அனுமதி தரவேண்டும் என வலியுறுத்தினா்.
பின்னா் அதன் நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 40 லட்சம் போயா் சமூக மக்கள் வாழ்கின்றோம். இவா்களில் 90 சதவீதம் போ் கல் உடைக்கும் தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறாா்கள். இந்த தொழில் எங்களுக்கு குலத்தொழிலாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கல் உடைக்கும் தொழிலை, பேக்கேஜ் டெண்டராக கொடுத்து விடுகிறாா்கள். இதனால் கல் உடைக்கும் தொழிலாளா்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா்.
எனவே, எங்களது குலத்தொழிலைக் காக்க, கல் உடைக்க அனுமதி தரவேண்டும். எங்களுக்கு சிறப்பு சலுகையாக பட்டா நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள சிறிய பாறைகளை உடைத்து தொழில்செய்ய வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.