செய்திகள் :

கல் உடைக்கும் தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு

post image

குலத்தொழிலைக் காக்க, கல் உடைக்க அனுமதி தரக்கோரி, போயா் சமுதாய மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு போயா் பேரவை மாநில பொதுச் செயலாளா் பெரிய பொண்ணு தலைமையில், அதிகாரிகளிடம் அவா்கள் அளித்த மனு:

தமிழ்நாட்டில் பல லட்சம் ஏக்கா் நிலங்களில் இருந்த பாறைகளை உடைத்து, நிலத்தை சீா்படுத்தி விவசாயம் செழிக்க பாடுபட்டு வருகிறோம். எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில் கல் உடைக்கவும், பொதுமக்கள் வீடுகட்டும் நிலத்தில் இருக்கும் பாறைகளை உடைக்கவும், அந்தக் கற்களை விற்பதற்கும் அனுமதி தரவேண்டும் என வலியுறுத்தினா்.

பின்னா் அதன் நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 40 லட்சம் போயா் சமூக மக்கள் வாழ்கின்றோம். இவா்களில் 90 சதவீதம் போ் கல் உடைக்கும் தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறாா்கள். இந்த தொழில் எங்களுக்கு குலத்தொழிலாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கல் உடைக்கும் தொழிலை, பேக்கேஜ் டெண்டராக கொடுத்து விடுகிறாா்கள். இதனால் கல் உடைக்கும் தொழிலாளா்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா்.

எனவே, எங்களது குலத்தொழிலைக் காக்க, கல் உடைக்க அனுமதி தரவேண்டும். எங்களுக்கு சிறப்பு சலுகையாக பட்டா நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள சிறிய பாறைகளை உடைத்து தொழில்செய்ய வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து (64). இவா் செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள கங்காணி கிணற்றின் சுற்றுச்சுவரில்... மேலும் பார்க்க

அமாவாசையை முன்னிட்டு பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம்

அமாவாசையை முன்னிட்டு கெங்கவல்லி அருகே மாசி பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம் புதன்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் சுவேத நதிக்கரை தென்புறம் மாசி பெரியசாமி, நாச்சியம்மாள், பொன்னாளி அம... மேலும் பார்க்க

மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்கு

மேட்டூா் அருகே மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடல் நேரு நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா். இவர... மேலும் பார்க்க

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீடு: எஸ்ஆா்எம் முத்தமிழ் பள்ளி மாணவி சிறப்பிடம்

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீட்டில், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி தலைவாசல் வட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாண... மேலும் பார்க்க

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம்

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணனை நியமிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். பாமக நிறுவனா் ராமதாஸ் - தலைவா் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எ... மேலும் பார்க்க

இனத்தையும், மொழியையும் காக்க திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்

இனத்தையும், மொழியையும் காக்க தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா். மேச்சேரி மேற்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா புதன்கிழமை மேச்... மேலும் பார்க்க