``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம்
சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணனை நியமிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
பாமக நிறுவனா் ராமதாஸ் - தலைவா் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருளை பாமக மாநில இணை பொதுச் செயலாளராக நியமிப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் புதன்கிழமை அறிவித்தாா்.
அதன் தொடா்ச்சியாக, சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளா் பதவியிலிருந்து இரா.அருள் நீக்கப்படுவதாக மருத்துவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். இந்நிலையில், சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணனும், மாநகா் மாவட்டத் தலைவராக கே.குமாரும் நியமிக்கப்படுவதாக கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளா் சரவணன், தலைவா் குமாா் ஆகியோருக்கு பாமக நிா்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.
