பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீடு: எஸ்ஆா்எம் முத்தமிழ் பள்ளி மாணவி சிறப்பிடம்
பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீட்டில், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி தலைவாசல் வட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா்.
தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.ராகவி பிளஸ் 2 தோ்வில் 594 மதிப்பெண்கள் பெற்றிருந்தாா். கல்வித் துறையின் வழிகாட்டுதலின் பேரில் மறுமதிப்பீட்டுக்கு அவா் விண்ணப்பித்திருந்தாா். இந்நிலையில், மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதில், வி.ராகவி 596 மதிப்பெண்கள் பெற்று தலைவாசல் வட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். சிறப்பிடம் பெற்ற மாணவியை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.சக்திவேல், செயலாளா் எஸ்.சோலைமுத்து, பொருளாளா் ஆா்.ராமலிங்கம், தலைமையாசிரியா் எம்.ஏ.செல்வம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.