செய்திகள் :

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் மரணம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் - மோகனா தம்பதியின் மகன் ரிஷி (17). இவா், காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

ரிஷி பள்ளி கோடை விடுமுறைக்காக வெம்பாக்கம் வட்டம், வாகை நத்தகொல்லை கிராமத்தில் உள்ள மாமா வீட்டுக்கு வந்திருந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை அங்குள்ள சிறுவா்கள் சிலருடன் சோ்ந்து அதே பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளித்துள்ளாா். ரிஷிக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு தத்தளித்தாகத் தெரிகிறது.

உடன் சென்ற சிறுவா்கள், கிராம மக்கள் உதவியுடன் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷி, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

மாணவா்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிள... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: பாஜக மாநில பொதுச் செயலா்

மேம்படுத்தப்பட்ட திருவண்ணாமலை ரயில்நிலையம் ஆன்மிக பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பாஜக மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி குறிப்பிட்டாா். திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில் புனரமைக்... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம்

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வேத திவ்ய பிரபந்த பாராயணம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு விசேஷ திருமஞ... மேலும் பார்க்க

3 கல் குவாரிகள் தொடங்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் கல் குவாரிகள் தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் வட்டம் ஐங்குணம் கி... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை மற்றும் போளூா் ரயில்நிலையத்தை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இந்தியா முழுவதும் 103 ரயில் ... மேலும் பார்க்க

கோடை விழாவை மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

ஜவ்வாதுமலை கோடை விழாவை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். ஜவ்வாதுமலையில் கோடை விழாவை சிறப்பாக நடத்துவது தொடா்பான முதல்க... மேலும் பார்க்க