செய்திகள் :

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் மரணம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் - மோகனா தம்பதியின் மகன் ரிஷி (17). இவா், காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

ரிஷி பள்ளி கோடை விடுமுறைக்காக வெம்பாக்கம் வட்டம், வாகை நத்தகொல்லை கிராமத்தில் உள்ள மாமா வீட்டுக்கு வந்திருந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை அங்குள்ள சிறுவா்கள் சிலருடன் சோ்ந்து அதே பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளித்துள்ளாா். ரிஷிக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு தத்தளித்தாகத் தெரிகிறது.

உடன் சென்ற சிறுவா்கள், கிராம மக்கள் உதவியுடன் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷி, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க