செய்திகள் :

"கிராமத்தில் வாழ்க்கை; படப்பிடிப்புக்கு மட்டும் மும்பை" - நடிகர் நானா படேகர் ஓப்பன் டாக்

post image

பாலிவுட் நடிகர் நானா படேகர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். 72 கோடிக்குச் சொத்துக்கள் இருக்கின்றன.

ஆனால் இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். புனே அருகில் கடக்வாஸ்லா என்ற இடத்தில் மலையடி வாரத்தில் 25 ஏக்கர் பண்ணை வீட்டில் வாழ்க்கையை வாழ்கிறார். தனது தோட்டத்தில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்.

கிராமத்து வாழ்க்கை குறித்து நானா படேகர் நடிகர் அமிதாப் பச்சனுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நானாபடேகர் இது குறித்து கூறுகையில், ''நான் கிராமத்தைச் சேர்ந்தவன். வேலைக்காக மட்டுமே மும்பைக்குச் செல்கிறேன்.

மும்பையில் படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் கிராமத்திற்குச் சென்று விடுகிறேன். அது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

நானா படேகர்
நானா படேகர்

கிராமத்தில் உங்களது அன்றாட பணிகள் என்னவென்று அமிதாப்பச்சன் கேட்டதற்கு, ''காலையில் எழுந்தவுடன் நானே உருவாக்கிய உடற்பயிற்சி கூடத்தில் சிறிது நேரம் உடற்பயிற்சி எடுக்கிறேன். எனக்குத் தேவையானதை நானே செய்கிறேன்.

காலை உணவு, மதிய உணவு உட்பட அனைத்து உணவுகளையும் நானே சமைக்கிறேன். நான் சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் சிறிய அளவில் ஹோட்டல் தொடங்கி இருப்பேன். ஆனால் நாம் எதிர்பார்ப்பதை விட வாழ்க்கை நமக்கு அதிகமாகவே கொடுக்கிறது.

எனக்கு எளிமையான வாழ்க்கை தேவைப்படுகிறது. மாலை நேரத்தில் புத்தகம் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். நான்கு ஷெல்ப் நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. நகரத்தில் நான்கு சுவருக்குள் வாழ்வோம். ஆனால் கிராமத்தில் நான் மலையில் வசிக்கிறேன்.

காலையில் எழும்ப அலாரம் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. பறவைகள் என்னை எழுப்பி விடுகின்றன. சில நேரங்களில் மயில்கள் எங்களது வீட்டிற்கு வருகின்றன.

எனது கிராமத்திற்கு வந்து ஒரு வாரம் நீங்கள் தங்குங்கள். மிகவும் அமைதியாக இருக்கும்" என்று அமிதாப்பச்சனிடம் தெரிவித்தார். உடனே அமிதாப்பச்சன், "எப்போதாவது உங்களது கிராமத்து வீட்டிற்கு வருவேன்'' என்றார்.

உடனே, "நிச்சயம் வாருங்கள். நான் எப்போதும் எனது நண்பர்களிடம் இந்த வீடு எனக்கு மட்டுமானது கிடையாது. இது உங்களுக்கானது. எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் கூறுவேன்'' என்று தெரிவித்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

`என் சிறுநீரகத்தை பீர் குடிப்பதுபோல் 15 நாள் குடித்தேன்' - நடிகர் பரேஸ் ராவல்

மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் பரேஸ் ராவல். இவர் தனது காலில் ஏற்பட்ட காயம் குணமாக செய்து கொண்ட வைத்தியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரும் கோமியத்தை குடிப்பது க... மேலும் பார்க்க

Homebound: முதல் முதலாக இந்திய திரைப்படத்தில் இணையும் Martin Scorsese!

ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மார்ட்டின்ஸ்கார்செஸி, இந்திய சினிமா இயக்குநர் நீரஜ் கைவான் இயக்கிய ஹோம்பவுண்ட் திரைப்பட்டத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பங்களித்துள்ளார். நீரஜ் கைவானின்... மேலும் பார்க்க

மும்பை: மன்னத் பங்களாவைக் காலி செய்த ஷாருக்கான்; கவலையில் உள்ளூர் வியாபாரிகள்; காரணம் என்ன?

மன்னத் பங்களாபாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்திராவில் உள்ள தனது மன்னத் பங்களாவிலிருந்து சமீபத்தில் காலி செய்துவிட்டு அருகில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மாடிகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு... மேலும் பார்க்க

Coolie - War 2: `சாரி சாரி, என் தவறுதான்..!’ - ரஜினி குறித்து ஹிருத்திக் ரோஷன் சொன்ன ஃப்ளாஷ்பேக்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது `கூலி’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமான வெளியாகிறது. பாலிவுட்டில் அதே நாளில்... மேலும் பார்க்க

Urvashi Rautela: `பத்ரிநாத்தில் எனக்கு கோயில்' - நடிகையின் பேச்சால் மதகுருக்கள் கோபம்; என்ன நடந்தது?

உத்தராகாண்டில் தனது பெயரில் கோவில் இருப்பதாக நடிகை ஊர்வசி ரவுடேலா கூறியதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன. பத்ரிநாத் பகுதியில் வசிக்கும் மக்கள், சமய அதிகாரிகள் மற்றும் மத குருக்கள் இதற்கு எதிர்ப்பு ... மேலும் பார்க்க

Anurag Kashyap: `சாதி இல்லை என்றால் நீங்களெல்லாம் யார்?’ - பூலே பட விவகாரத்தில் அனுராக் காட்டம்

அனுராக் கஷ்யப் பூலே திரைப்படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூகத்தினர் மீது விமர்சனங்களை வைத்துள்ளார். சமூக சீர்திர... மேலும் பார்க்க