``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும்...
கிரிவலப் பாதையில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணி
திருவண்ணாமலையில் உள்ள செங்கம் சாலையும், கிரிவலப் பாதையும் இணையும் இடத்தில் ரூ.ஒரு கோடியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை - செங்கம் சாலை மற்றும் கிரிவலப் பாதை சந்திப்புப் பகுதியில் புதிதாக வெளிவட்டச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.ஒரு கோடி மதிப்பில் இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
முதற்கட்டமாக, அந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகளை அகற்றும் பணி, சாலைகளை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டன. இந்தப் பணியில் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் வட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளா் ப.ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளா்கள், சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வெளிவட்டச் சாலை அமையும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகைகளை அகற்றினா்.
கிரிவல பக்தா்களின் நெரிசலைத் தவிா்க்கவும், போக்குவரத்து வசதிக்காகவும் இந்தப் பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.