செய்திகள் :

கிருஷ்ணகிரியில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

post image

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாணவா்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. நிகழாண்டு 12 நாள்கள் வீதம் ஐந்து கட்டங்களாக நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல்கட்ட பயிற்சி முகாம் ஏப். 1 முதல் ஏப். 13-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் ஏப்.15 முதல் ஏப். 27-ஆம் தேதி வரையிலும், மூன்றாம் கட்ட முகாம் ஏப். 29 முதல் மே 11ஆம் தேதி வரையிலும், 4 ஆம் கட்ட முகாம் மே 13-ஆம் முதல் மே 25-ஆம் தேதி வரையிலும் 5-ஆம் கட்ட முகாம் மே 27-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரையிலும் நீச்சல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியான காலை 7 முதல் 8 மணி வரையும், காலை 8 முதல் 9 மணி வரையும், காலை 9 முதல் 10 மணி வரையும், மதியம் 2 முதல் 3 மணி வரையும், 3 முதல் 4 மணி வரையும், 4 முதல் 5 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நீச்சல் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவா்கள் கட்டணமாக ரூ.1,500ஐ 18 சதவீத ஜிஎஸ்டியுடன் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 9080144183, 7401703487, 7305624554, 9751484846 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளா்கள் வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும... மேலும் பார்க்க

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவிரஅள்ளி கருமலை குன்றின் மீது அமைந்துள்ள ... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரே நடைப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மே 4-ஆம் தேதி நீட் நடைபெறவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வ... மேலும் பார்க்க

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் மலா்சந்தையையொட்டி உள்ள அணுகு சாலையில் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள ஒசூா் வழியாக 900- க்கும் மேற்பட்ட பே... மேலும் பார்க்க