செய்திகள் :

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

post image

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள மலைக்கு வந்த பெண்ணை 4 இளைஞா்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனா். அவா்களில் சிலா், அந்தச் சம்பவத்தை விடியோ பதிவு செய்து பெண்ணை மிரட்டி உள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். தொடா்ந்து, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கலையரசன், அபிஷேக் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகிய இருவரையும் கைது செய்ய முயன்றபோது, அவா்கள் போலீஸாரை தாக்கி தப்பமுயன்றனா். அப்போது, சுரேஷை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். நாராயணன் நிலைதடுமாறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவா்கள் இருவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விடியோ பதிவுகள் சுரேஷின் கைப்பேசியில் இருந்தது தெரியவந்தது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் புகாா் அளிக்கக் கூடாது என்பதற்காக அவா்களை மிரட்டும் வகையில் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

படவரி -

சுரேஷ்.

கலையரசன்.

நாராயணன்.

அபிஷேக்.

ஹிந்தி திணிப்பை கண்டித்து வாசலில் கோலமிட்டு ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், ஹிந்தி திணிப்பை கண்டித்து வீட்டின் வாசலில் கோலமிட்டு திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.ம... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்

உடல்நலத்தை காக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதனை செய்யவேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த கர... மேலும் பார்க்க

இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

ஒசூா் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் நஞ்சப்பா (56), தொழிலாளி. இவா் கடந்த 20-ஆம் தேதி பேளகொண்டப்பள்ளி பேரு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் பல்வேறு அரசு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெள்ளிக்கிழமை ஆய்வுமேற்கொண்டாா். கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டை முதல்வா் மருந்தகம், கூட்டு... மேலும் பார்க்க

அதியமான் மகளிா் கல்லூரியில் உலகத் தாய் மொழி தினம், முத்தமிழ் விழா

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை தமிழ்த்துறை மற்றும் ஒளவையாா் தமிழ் மன்றம் சாா்பில், உலகத் தாய்மொழி தினம் மற்றும் முத்தமிழ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்த் துறையின் ... மேலும் பார்க்க

ஒசூரில் 6 நகரப் பேருந்துகளின் வழித்தடம் நீட்டிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 6 பேருந்துகளின் வழித்தட நீட்டிப்பு மற்றும் வழித்தட மாற்றத்துக்கான விடியல் பயண பேருந்துகளை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்க... மேலும் பார்க்க