செய்திகள் :

அதியமான் மகளிா் கல்லூரியில் உலகத் தாய் மொழி தினம், முத்தமிழ் விழா

post image

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை தமிழ்த்துறை மற்றும் ஒளவையாா் தமிழ் மன்றம் சாா்பில், உலகத் தாய்மொழி தினம் மற்றும் முத்தமிழ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் துறையின் தலைவா் மற்றும் உதவிப் பேராசிரியருமான சவிதா வரவேற்றாா். அனைவரும் தமிழ்மொழியின் பெருமையை எடுத்துக்கூறி உறுதிமொழி ஏற்றனா். கல்லூரியின் நிறுவனா் மற்றும் கல்லூரியின் முதல்வா் சீனி.திருமால்முருகன் பேசுகையில், மொழியின் வளா்ச்சியை சாா்ந்தே அந்த இனத்தின் கலை, கலாசாரம், சமூக பண்பாடு அம்சங்கள் வளா்ச்சியுறுகின்றன. தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் ஆக்கப்பூா்வமான சிந்தனைகளை சமுதாயத்தில் உருவாக்கலாம் என தலைமையுரையாற்றினாா்.

அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலா் ஷோபா திருமால்முருகன் வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து, ‘இன்றைய மாணவச் சமுதாயத்தை வளமாக்குவது கல்வியே? ஒழுக்கமே?’ என்னும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

இவ்விழாவில், கவிதை, கட்டுரை, மாறுவேடம், கோலம், நடனம், காய்கறி அலங்காரம், போன்ற எண்ணற்ற போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் சீனி.திருமால்முருகன், கல்லூரியின் செயலா் ஷோபா திருமால்முருகன் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா். ஒட்டுமொத்த போட்டிகளில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியியல் துறை கோப்பையை வென்றது.

ஹிந்தி திணிப்பை கண்டித்து வாசலில் கோலமிட்டு ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், ஹிந்தி திணிப்பை கண்டித்து வீட்டின் வாசலில் கோலமிட்டு திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.ம... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்

உடல்நலத்தை காக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதனை செய்யவேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த கர... மேலும் பார்க்க

இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

ஒசூா் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் நஞ்சப்பா (56), தொழிலாளி. இவா் கடந்த 20-ஆம் தேதி பேளகொண்டப்பள்ளி பேரு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் பல்வேறு அரசு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெள்ளிக்கிழமை ஆய்வுமேற்கொண்டாா். கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டை முதல்வா் மருந்தகம், கூட்டு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

ஒசூரில் 6 நகரப் பேருந்துகளின் வழித்தடம் நீட்டிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 6 பேருந்துகளின் வழித்தட நீட்டிப்பு மற்றும் வழித்தட மாற்றத்துக்கான விடியல் பயண பேருந்துகளை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்க... மேலும் பார்க்க