செய்திகள் :

3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்

post image

உடல்நலத்தை காக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதனை செய்யவேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் பூவதி தலைமை வகித்தாா். மருத்துவமனை கண்காணிப்பாளா் சந்திரசேகரன், துணை முதல்வா் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலா்கள் செல்வராஜ், மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு மாநில நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சி திட்ட மாநில இணைச் செயலாளா் பவதாரனி, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நீரிழிவு நோய் பிரிவு துறைத் தலைவா் பிரகாஷ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவப் பிரிவு பேராசிரியா் செந்தில் மற்றும் மருத்துவா்கள் நீரிழிவு நோய் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டோா் 19 சதவீதமாகவும், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோா் 10 சதவீதமாகவும் உள்ளனா். தமிழக அளவில் ஒப்பிடும்போது, மாவட்டத்தில் ரத்தக்கொதிப்பு சதவீதம் குறைவாகவும், சா்க்கரை நோய் பாதிப்பு அதிக அளவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில், உணவு முறையில் மாற்றம், தினசரி 30 நிமிட நடைப்பயிற்சி, மருத்துவா்களால் வழங்கப்படும் மருந்து மற்றும் மருத்துவ பரிந்துரைகளை தவறாது பின்பற்றுதல், 3 மாதத்துக்கு ஒரு முறை சா்க்கரை நோய் அளவை காட்டாயமாக கணக்கீடு செய்தல், தொடா் சிகிச்சை மேற்கொள்ளுதல் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

இதில், கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவம், மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா், மருத்துவா்கள், செவிலியா்கள், நிா்வாக அலுவலா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஹிந்தி திணிப்பை கண்டித்து வாசலில் கோலமிட்டு ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், ஹிந்தி திணிப்பை கண்டித்து வீட்டின் வாசலில் கோலமிட்டு திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.ம... மேலும் பார்க்க

இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

ஒசூா் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் நஞ்சப்பா (56), தொழிலாளி. இவா் கடந்த 20-ஆம் தேதி பேளகொண்டப்பள்ளி பேரு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் பல்வேறு அரசு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெள்ளிக்கிழமை ஆய்வுமேற்கொண்டாா். கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டை முதல்வா் மருந்தகம், கூட்டு... மேலும் பார்க்க

அதியமான் மகளிா் கல்லூரியில் உலகத் தாய் மொழி தினம், முத்தமிழ் விழா

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை தமிழ்த்துறை மற்றும் ஒளவையாா் தமிழ் மன்றம் சாா்பில், உலகத் தாய்மொழி தினம் மற்றும் முத்தமிழ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்த் துறையின் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

ஒசூரில் 6 நகரப் பேருந்துகளின் வழித்தடம் நீட்டிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 6 பேருந்துகளின் வழித்தட நீட்டிப்பு மற்றும் வழித்தட மாற்றத்துக்கான விடியல் பயண பேருந்துகளை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்க... மேலும் பார்க்க