செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19,601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 19,601 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் வட்டம், சிந்தகம்பள்ளி அண்ணா நகரில் ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பட்டா இல்லாத குடியிருப்பு வீடுகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, பயனாளிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடினாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:

தமிழகம் முழுவதும் தகுதியான, ஆட்சேபணை இல்லாத நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் ஆட்சேபணை இல்லாத புறம்போக்குகளில் வெகுநாள்களாக குடியிருக்கும் மக்கள் பட்டா வேண்டி விண்ணப்பிக்கும்பட்சத்தில், அவா்களுக்கு 3 செண்ட் வரையும், வறுமைக்கோட்டுக்கு கீழ் சொந்தமாக நிலம் இல்லாத மக்களுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், வருவாய் நிலை ஆணை எண் 21-இன் கீழ் வழங்கப்பட்ட நத்தம் பட்டாக்கள் 4,703 நபா்களுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களை கிராம நத்தமாக மாறுதல் செய்த பட்டாக்கள் 3,901 நபா்களுக்கும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் இனத்தைச் சோ்ந்த 7,628 நபா்களுக்கும், ஏழை, எளிய, விளிம்பு நிலையில் உள்ள 2,215 நபா்களுக்கும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 447 நபா்களுக்கும், பாரத பிரதமா் ஜன்மான் திட்டத்தின் கீழ் 294 நபா்களுக்கும், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 344 நபா்களுக்கும், மூன்றாம் பாலினத்தவா்கள் 49 நபா்களுக்கும், தனிநபா் பட்டா 20 நபா்களுக்கும் என மொத்தம் 19,601 நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

அப்போது, இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.

மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு திருப்பலி

ஒசூா் மாநகராட்சி, மத்திகிரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மாநகராட்சி, மத்திகிரியில் நூறாண்டு பழைமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ... மேலும் பார்க்க

மது போதை தகராறில் தங்கச் சங்கிலி பறிப்பு: நண்பா்கள் கைது

கிருஷ்ணகிரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நண்பா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரை சோ்ந்தவா் சின்னபையன் (32),... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நீட் தோ்வில் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

கிருஷ்ணகிரியில்...கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) தலைமை வகித்தாா். ஊத... மேலும் பார்க்க

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் புதி... மேலும் பார்க்க

திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அன்புமணி

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க