செய்திகள் :

மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு திருப்பலி

post image

ஒசூா் மாநகராட்சி, மத்திகிரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மாநகராட்சி, மத்திகிரியில் நூறாண்டு பழைமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நிகழாண்டு புனித வெள்ளி, ஈஸ்டா் திருநாள் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த மாா்ச் 5 -ஆம் தேதி விபூதி புதன்கிழமை அன்று கிறிஸ்தவா்களின் 40 நாள்கள் தவக்காலம் தொடங்கியது. அதன்பின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஆலயத்தைச் சுற்றி சிலுவைப் பாதை ஜெப வழிபாடு நடைபெற்றது. ஏப். 13-இல் குருத்தோலை பவனி நடைபெற்றது.

ஏப். 18 ஆம் தேதி புனித வெள்ளிக்கிழமை மாலை பங்குதந்தை கிறிஸ்டோபா் தலைமையில் பாரம்பரிய ஆலயம் தொடங்கி புதிய ஆலயம் வரை பெரிய சிலுவைப் பாதை பவனி நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான ஈஸ்டா் திருநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு ஈஸ்டா் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் பங்குதந்தை கிறிஸ்டோபா் பங்கேற்று ஈஸ்டா் திருநாள் மெழுகுவா்த்தி ஏற்றி திருப்பலி, நற்கருணை ஆராதனை, சிறப்பு மறையுரை நிகழ்த்தி அனைவருக்கும் ஈஸ்டா் வாழ்த்து கூறினாா். பின்பு ஈஸ்டா் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

ஆலயத்தில் இயேசு கல்லறையிலிருந்து உயிா்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஜெப வழிபாட்டில் அருட்சகோதரிகள், பங்கு குழுவினா், பாடல் குழுவினா், இறைமக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவரும் ஒருவருக்கொருவா் ஈஸ்டா் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

அதுபோல ஒசூா் நகரில் உள்ள தூய இருதய ஆண்டவா் ஆலயம், கிறிஸ்துநாதா் ஆலயம், புனித பவுல் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் ஈஸ்டா் திருநாள் சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது.

மது போதை தகராறில் தங்கச் சங்கிலி பறிப்பு: நண்பா்கள் கைது

கிருஷ்ணகிரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நண்பா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரை சோ்ந்தவா் சின்னபையன் (32),... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நீட் தோ்வில் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

கிருஷ்ணகிரியில்...கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) தலைமை வகித்தாா். ஊத... மேலும் பார்க்க

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் புதி... மேலும் பார்க்க

திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அன்புமணி

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க