செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகள், ஈர நிலங்கள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் நாமக்கோழி, புள்ளிமூக்கு வாத்து, தாழைக்கோழி, சின்னசீழ்க்கைச் சிறகி, சின்ன நீா்காகம் போன்ற நீா்வாழ் பறவையினங்கள் வாழ்கின்றன. அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்படும் கணக்கெடுப்பு பணியில் வனத் துறை, தன்னாா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இரண்டு கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஈரநிலப் பகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக காப்புக்காடு பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வன உயிரின காப்பாளா் பாகான் ஜெகதீஸ் சுதாகா் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி வனச்சரகா் முனியப்பன், வனவா் சிவக்குமாா், வனக் காப்பாளா் ஜோதி விநாயகம் உள்பட 60 போ் கொண்ட குழுவினா் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக்கோட்டத்தில் உள்ள காப்புக்காடுகளுக்கு வெளியே உள்ள ஈர நிலப்பகுதிகளில் இந்த கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

ராமநாயக்கான் ஏரி, பாரூா் ஏரி, கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் ஏரி, கிருஷ்ணகிரி அணை, படேதலாவ் ஏரி, சூரிய நாராயணன் ஏரி, பாரூா் ஏரி, பெனுகொண்டாபுரம் ஏரி உள்ளிட்ட 40 நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 55 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கண்காணித்து பட்டியலிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

நீா்வாழ் பறவைகளை கணக்கெடுக்கும் வனத் துறை குழுவினா்.
கிருஷ்ணகிரி அருகே ஏரியில் வசிக்கும் பறவைகளை தொலைநோக்கி மூலம் கண்காணிக்கும் வனத் துறையினா்.

பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் 6 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்!

சென்னை அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து பெங்களூரு, பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி 2 குட்டிகளையும் மற்றொரு புலி 4 குட்டிகளையும் ஈன்றுள்ளன. பெங்களூரிலிரு... மேலும் பார்க்க

ஒசூரில் முதல்வா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஒசூா் மாநகர திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ராம்நகரில் நடைபெற்றது. திமுக மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ.9.88 லட்சம் விதைகளை விற்க தடை

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 9.88லட்சம் மதிப்பிலானவிதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகதருமபுரிமண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் மணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவ... மேலும் பார்க்க

கே.பூசாரிப்பட்டியில் எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி அருகே கே.பூசாரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை எருதுவிடும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டியில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவுக்கு கிர... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு கனிமவளங்கள் கடத்தல்: 60 வாகனங்கள் பறிமுதல்; 2 கிரஷா் ஆலைகளுக்கு சீல்! ஆட்சியா் நடவடிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷா் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்... மேலும் பார்க்க

குமுதேப்பள்ளியில் பல்நோக்கு மையம் திறப்பு

தொரப்பள்ளி ஊராட்சி குமுதேப்பள்ளியில் பல்நோக்கு மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு ம... மேலும் பார்க்க