உயிரைப் பறித்ததா அழகைப் பாதுகாக்கும் மருந்து? ஷெபாலியின் மரணத்தில் போலீஸ் விசாரண...
கீழக்கரை நகராட்சி ஆணையா் பணியிடை நீக்கம்!
கீழக்கரை நகராட்சி ஆணையா் திங்கள்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆணையராகப் பொறுப்பேற்றவா் ரெங்கநாயகி. காரைக்குடியில் பணியாற்றிய போது இவா் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இவா், வருகிற திங்கள்கிழமையுடன் பணி ஓய்வு பெற இருந்தாா். இந்த நிலையில் ஆணையா் ரெங்கநாயகி வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.