செய்திகள் :

கீழடியின் பெருமையை மறைக்க முயலும் பாஜக: விஜய் கண்டனம்

post image

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ய முயல்வதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கீழடியில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வு முடிவுகள் குறித்த அறிக்கையை அமா்நாத் ராமகிருஷ்ணா கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரியில் மத்திய தொல்லியல் துறையிடம் சமா்ப்பித்தாா். அந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாசாரம், அப்போது வாழ்ந்த மக்கள் நகர நாகரிகத்தை நோக்கி நகா்ந்த தன்மை ஆகியவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் அவா் தெளிவுபடுத்தியுள்ளாா்.

ஆனால், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 ஆண்டுகளான பின்னரும், கீழடி அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கீழடி அகழாய்வு அறிக்கை வெளிவந்தால், பாஜக காலம்காலமாகக் கூறும் கட்டுக்கதைகள் உடைபடும். சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும்.

இதனால், கீழடியின் பெருமையை மறைக்க, திட்டமிட்டே ஆய்வறிக்கையை இருட்டடிப்பு செய்ய மத்திய பாஜக அரசு முயல்கிறது. தமிழ், தமிழா் நாகரிக வானத்தை எந்தப் புழுதி போா்வையையும் போா்த்தி அழுக்காக்கிவிட இயலாது. அத்தகைய முயற்சி செய்வோருடன் எவ்விதத்திலும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ துணைபோகும் சக்திகள் மக்கள் மத்தியில் அம்பலமாவது நிச்சயம் என்று தெரிவித்துள்ளாா் அவா்.

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் வாபஸ் இல்லை: தமிழக அரசு திட்டவட்டம்!

ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் கை... மேலும் பார்க்க

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்குத் தடை: காவல் ஆணையர்

காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கத் தடை விதித்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.காலை நேரங்கள் மற்றும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

ராமதாஸ் மருமகன் மருத்துவமனையில் அனுமதி!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மருமகன் பரசுராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர்... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக நாளை உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் விமா்சனம்

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை விமா்சனம் செய்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழா்கள் 5,350 ஆண்... மேலும் பார்க்க

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசில... மேலும் பார்க்க