செய்திகள் :

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

post image

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பருவமழை தொடங்கியது முதல், இன்று (செப்.4) வரை 92.64 சதவிகிதம் மழை பெய்துள்ளது பதிவாகியிருப்பதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதில், அதிகப்படியாக வடக்கு குஜராத்தில் 96.94 சதவிகிதம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, தெற்கு குஜராத்தில் 96.91 சதவிகிதம், கிழக்கு - மத்திய குஜராத்தில் 93.79 சதவிகிதம், கட்ச் மாவட்டத்தில் 85.14 சதவிகிதம் மற்றும் சௌராஷ்டிராவில் 84.74 சதவிகிதம் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 206 அணைகளில், 113 அணைகளுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், 82 அணைகள் 100 சதவிகிதமும், 68 அணைகள் 70 - 100 சதவிகிதமும் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், குஜராத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் சர்தார் சரோவார் அணையானது அதன் முழுக் கொள்ளளவில் 89 சதவிகிதத்துக்கும் அதிகமாக நிரம்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த சில நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வரும் செப்.4 முதல் செப்.7 ஆம் தேதி வரை குஜராத் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

It has been reported that 113 dams are being actively monitored in the state of Gujarat, with about 92.64 percent of the monsoon rainfall recorded.

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்... மேலும் பார்க்க

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது தொகுதியைவிட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்: வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு!

சமையல் பாத்திரங்கள், மரப் பொருள்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தினசரி உபயோகப் பொருள்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தடையில்லாத வகையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரைவு தரநிலை வழிகாட்டுதலை மத்த... மேலும் பார்க்க

நாம் இருவா்; நமக்கு இருவா் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா? காங்கிரஸ் கேள்வி

‘ஒவ்வொரு இந்திய தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ... மேலும் பார்க்க

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சரத்குமாா் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சோ்ந்த நடிகா் ஆா்.சரத்குமாா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவருடன் தமிழக பாஜக துணைத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுந்தரும் உடனி... மேலும் பார்க்க