செய்திகள் :

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

post image

குஜராத்தில் யாரும் அறியாத பெயர்கள் கொண்ட கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை கிடைத்திருப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்குமா என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கில் ராகுல் காந்தி தலைமையில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து வாக்குரிமை பேரணியை பிகாரில் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, குஜராத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள யாரும் அறியாத அரசியல் கட்சிகள் ரூ. 4,300 கோடி நன்கொடை பெற்றிருப்பது குறித்து நாளிதழில் வெளியான செய்தியைப் பகிர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

”குஜராத்தில் சில பெயர் தெரியாத கட்சிகள் உள்ளன, அவற்றின் பெயர்களை யாரும் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், அந்த கட்சிகள் ரூ. 4,300 கோடி மதிப்புள்ள நன்கொடைகளைப் பெற்றுள்ளன.

இந்தக் கட்சிகள் மிகக் குறைந்த தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டுள்ளன. குறைவாகவே செலவிட்டுள்ளன.

இந்த ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன? கட்சிகளை யார் நடத்துகிறார்கள்? பணம் எங்கே போனது?

தேர்தல் ஆணையம் விசாரிக்குமா? அல்லது இங்கும் பிரமாணப் பத்திரங்களைக் கேட்குமா? அல்லது இந்த முறையும் மறைக்கும் வகையில் சட்டத்தையே மாற்றுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முகவரி இல்லாத 10 கட்சிகளும் ரூ. 4,300 கோடி நன்கொடையும்..

ஹிந்தி நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

குஜராத்தில் பதிவுசெய்யப்பட்ட யாரும் அறியாத 10 அரசியல் கட்சிகள் எதிர்பாராத நன்கொடைகளைப் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் 2019 - 20 முதல் 2023 - 24 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நன்கொடையாளர்களிடமிருந்து ரூ. 4,300 கோடி நன்கொடைகளைப் பெற்றுள்ளன.

இந்த காலகட்டத்தில் குஜராத்தில் இரண்டு மக்களவைத் தேர்தலும் ஒரு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றுள்ளன. இந்த மூன்று தேர்தல்களில் 10 கட்சிகளைச் சேர்த்து மொத்தம் 43 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 54,069 மட்டுமே.

மேலும், தேர்தல் செலவு அறிக்கையில் செலவிடப்பட்ட தொகையாக ரூ. 39.02 லட்சம் மட்டுமே காட்டியிருக்கும் நிலையில், தணிக்கை அறிக்கை ரூ. 3,500 கோடி செலவிட்டதாக அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.

கட்சியின் பெயர்கள்

ஜனநாயக சக்தி கட்சி

பாரதிய தேசிய ஜனதா தளம்

சுதந்திர பேச்சு கட்சி

புதிய இந்தியா ஐக்கிய கட்சி

சத்யவாதி ரக்‌ஷத் கட்சி

இந்திய மக்கள் மன்றம்

சௌராஷ்டிர ஜனதா கட்சி

ஜன் மேன் கட்சி

மனித உரிமைகள் தேசிய கட்சி

கரிப் கல்யாண் கட்சி

Lok Sabha Opposition Leader Rahul Gandhi has questioned whether the Election Commission of India will investigate the Rs 4,300 crore donation received by unknown parties in Gujarat.

இதையும் படிக்க : பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டு போட்டியிடும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) முழு ஆதரவளிப்பதாக அ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் தேங்குவதால், வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச்செல்லப்படும் என்ற அபாயம் உள... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடத்தில் இருந்து 400 மாணவர்கள் மற்றும் 40 ஆசிரியர்களை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவம் உள்ளிட்ட படைகள் ஈடுபட்டு வருகின்றன. குர்தாஸ்பூர் மாவட்டத்தின், த... மேலும் பார்க்க

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

மோடி அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் அமெரிக்காவின் வரிவிதிப்பு, இந்தியாவில் வேலையிழப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்... மேலும் பார்க்க

ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு!

ஹிமாசலில் தொடரும் கனமழையால் கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ளச்சேதம் குறித்து அம்மாநில அமைச்சர் விக்கிரமாதித்ய சிங் தெரிவித்திருப்பதாவது: “ ஹிமாசல பிரதேசத்தி... மேலும் பார்க்க

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

பாஜக மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா? என்ற கோணத்திலும் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க