செய்திகள் :

குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது பிஎஸ்எஃப் நடவடிக்கை!

post image

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைதுசெய்துள்ளது. மேலும், அந்த மீனவா்களின் இயந்திர படகை பிஎஸ்எஃப் பறிமுதல் செய்தது.

கட்ச் பிராந்தியத்தின் கோரி கழிமுகத்தில் உள்ள எல்லை கண்காணிப்பு கோபுர பகுதியில் பணியில் இருந்த வீரா்கள், அப்பகுதியில் மா்மப் படகு ஒன்று இருப்பதைக் கண்டனா். இதையடுத்து, பிஎஸ்எஃப் வீரா்கள் எல்லை பகுதியில் சனிக்கிழமை தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுடன் 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக பிஎஸ்எஃப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பில், ‘கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் மீனவா்கள் அனைவரும் அந்நாட்டின் சிந்து மாகாணத்தின் சுஜாவல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். பிஎஸ்எஃப்-இன் 68-ஆவது பட்டாலியனின் எல்லை கண்காணிப்பு கோபுர பகுதியில் அந்த மீனவா்களின் படகு இருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 60 கிலோ மீன், 9 மீன்பிடி வலைகள், டீசல், ஐஸ் கட்டிகள், உணவு பொருள்கள் உள்ளிட்டவை இருந்தன. ஒரு கைப்பேசி மற்றும் ரூ.200 பாகிஸ்தான் கரன்சி ஆகியவை அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.8 கோடி சம்பளத்தில் வேலை! தனியார் கல்லூரி விளம்பரத்துக்கு வந்த சோதனை!

தங்கள் கல்லூரியில் படித்த இளைஞருக்கு ரூ.1.8 கோடி சம்பளம் கொடுக்கும் வேலை கிடைத்திருப்பதாகக் கூறி தனியார் கல்விக் குழுமம் வெளியிட்ட விளம்பரம் வைரலாகியிருக்கிறது.ஒவ்வொரு கல்லூரியில், தங்கள் கல்லூரி மாணவ... மேலும் பார்க்க

ராகுல்காந்தி ஒரு தொடர் பொய்யர்: முதல்வர் ஃபட்னவீஸ் விமர்சனம்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு "தொடர் பொய்யர்" என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னவீஸ் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தப் பொய்கள்... மேலும் பார்க்க

நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமனாரும் கைது

கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் மாமனாரை உத்தரப் பிரதேச போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.ஏற்கெவே இந்த வழக்கில் இளம்பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி ஆகிய... மேலும் பார்க்க

வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்ததால் இளைஞர்கள் பற்றி மோடிக்கு கவலையில்லை! ராகுல்

தில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை நிறைவு!

சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை 48 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 10வது குழுவுடன் யாத்திரை நிறைவடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை 48 பக்த... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

புது தில்லி: ஒரு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால், அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம்... மேலும் பார்க்க