குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
புது தில்லி: ஒரு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால், அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றத்தால் பாதிக்கப்பட்டவரின் உரிமை, வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்த குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைக்கு இணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
இன்று வழக்கு விசாரணையின்போது, ஒரு குறிப்பிடத்தக்க உத்தரவை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. அதன்படி, ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் உட்பட, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.