செய்திகள் :

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை நிறைவு!

post image

சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை 48 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 10வது குழுவுடன் யாத்திரை நிறைவடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 48 பக்தர்களை சிக்கிம் சுற்றுலா மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் வரவேற்றனர், மேலும் 2025ஆம் ஆண்டிற்கான கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் வெற்றிகரமான முடிவைக் குறிக்கும் வகையில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.

சிக்கிம் சுற்றுலா மேம்பாட்டுக் கழக தலைவர் லுகேந்திர ரசைலி கூறுகையில்,

அதிகாரிகளின் அர்ப்பணிப்புப் பணியின் காரணமாக இந்தாண்டு சுமார் 500 பக்தர்கள் கைலாஷ் மானசேரோவர் சுற்றுப்பயணத்தை சுமூகமாக நிறைவு செய்தனர்.

யாத்திரை எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவடைவதை உறுதி செய்வதற்காகத் துணை ராணுவப் படைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஆதரவுடன் பக்தர்களுக்குப் பல்வேறு ஏற்பாடுகளை அவர்கள் செய்தனர்.

இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாகக் கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தாண்டு யாத்திரைக்காக 750 இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 500 பேர் நாது லா பாதை வழியாக 10 குழுக்களாகவும், 250 பேர் உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாகவும் பயணம் செய்தனர்.

இந்த யாத்திரையானது ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரையில் 19,500 அடி உயரத்தில், மோசமான வானிலை மற்றும் கரடுமுரடான பாதைகளில் மலையேறப்படுகிறது. உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் தகுதியற்றவர்களே இந்த யாத்திரைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

The Kailash Manasarovar Yatra via Nathu La Pass in Sikkim ended with the return of the 10th batch of 48 tourists from the pilgrimage site, officials said on Monday.

தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம்!

உலகப் புகழ் பெற்ற மைசூரு சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் தசரா விழாவில் புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக பாஜக தரப்பிலிரு... மேலும் பார்க்க

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஜம்மு - காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் எதிரொலியாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.ஜம்மு - காஷ்மீரில் உரி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமா... மேலும் பார்க்க

பஞ்சாபில் இலவச ரேஷனை நிறுத்த மத்திய அரசு சதி: பகவந்த் மான்

பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநிலத்தில் 55 லட்ச மக்களுக்கு இலவச ரேஷனை நிறுத்தச் சதி செய்வதாக பஞ்சாப் முதல்வர் பகந்த் மான் குற்றம் சாட்டினார். பஞ்சாப் மக்களுக்கு எழுதிய எழுத்துப்பூர்வ செய்தியில், மாநில... மேலும் பார்க்க

நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றார் அஜய் குமார்!

மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் இல. கணேசனின் மறைவைத் தொடர்ந்து, அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு குவாஹ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் தொடரும் கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

ராஜஸ்தானில் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்ப்பூர் உள்ட பிற மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

நடிகை, எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை! கேரள காங்கிரஸ் எம்எல்ஏ இடைநீக்கம்!

பாலியல் புகார்களைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராகுல் மம்கூத்ததில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பெரிய அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர் ... மேலும் பார்க்க