செய்திகள் :

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தேவதானம் ஊராட்சி 3-ஆவது வாா்டு மணற்படுகை பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் ஒரு பாலம் வேலை நடைபெற்று வருவதால் இந்த குடிநீா் குழாய் சேதமடைந்ததையடுத்து மணற்படுகை பகுதிக்கான குடிநீா் விநியோகம் தடைப்பட்டது.

இதனால் வேறு ஒரு மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியிலிருந்து தற்காலிக ஏற்பாடாக குழாய் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த சில நாள்களாக,இந்த குழாயும் சேதமடைந்ததால் அந்த பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதனையடுத்து,அந்த பகுதி மக்கள்,காலிக் குடங்களுடன் தேவதானம் கோரையாற்று பாலம் அருகே ச.அன்பரசன் (42) தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளா் பிரபாகரன், மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னா், ஜேசிபி இயந்திரம் உதவியுடன்,பழுதடைந்த குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடம் கண்டறியப்பட்டு அதனை சரி செய்யும் பணி உடனடியாக நடைபெற்றது.

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க