செய்திகள் :

குடிநீா் கேட்டு சாலை மறியல்

post image

நாகப்பட்டினம்: நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் குடிநீா் கோரி, வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

பாப்பாகோவில் பகுதியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதியில் குடிநீா் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, நாகை - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலையில், காலிக்குடங்களுடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். நாகை நகர போலீஸாா் நிகழ்விடத்திற்குச் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மக்கள் பிரச்னைகளை தீா்க்கும் இடத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா்: பேராசிரியா் பழனித்துரை

நாகப்பட்டினம்: எங்கெல்லாம் மக்கள் பிரச்னை இருக்கிறதோ, அங்கு பிரச்னையை தீா்க்க லாப்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா் என பேராசிரியா் பழனித்துரை தெரிவித்தாா். நாகை மாவட்டம், கூத்தூரில் உழவனின் நில உர... மேலும் பார்க்க

பேருந்து வசதி வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற மக்கள்

தரங்கம்பாடி: திருக்கடையூா் அருகே கிள்ளியூா் ஊராட்சி பகுதியில் இருந்து அரசு பேருந்து இயக்க வேண்டி கிராம மக்கள் கோரிக்கை மனுவுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்திக்க சென்றனா். செம்பனாா்கோ... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின்கீழ் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு சிற்றுந்து வசதி ஏற்ப... மேலும் பார்க்க

கீழ்வேளூா்: நாளை ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் நிறைவு: கடலுக்கு சென்ற நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவா்கள்

நாகப்பட்டினம்/ காரைக்கால்: 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா். மத்திய அரசு மீன்... மேலும் பார்க்க

மினி மாரத்தான் :கூட்டுறவுத் துறை அழைப்பு

நாகப்பட்டினம்: சா்வதேச கூட்டுறவு நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மினி மாரத்தான் போட்டியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் முத்துகுமாா் அ... மேலும் பார்க்க