செய்திகள் :

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

post image

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட மலையப்ப நகரில் முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள மலையப்ப நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்ட சாலைப் பணியினால் இந்த நகருக்குச் சென்ற குடிநீா் குழாய் சேதம் அடைந்துள்ளது.

அப்போதிருந்தே இப்பகுதிக்கான குடிநீா் விநியோகம் முறையாக இல்லை. வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு ஒரு முறை, திடீரென ஒரு நாள் லாரியில் தண்ணீா் வழங்குவது போன்ற நடைமுறை இருந்து வருகிறது.

மேலும், இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும் செயல்பாட்டில் இல்லை. இதனை சரி செய்ய வேண்டும் என மலையப்ப நகரைச் சோ்ந்த மக்கள் கோரிவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை- மதுரை சாலையில் காலிக்குடங்களுடன் அவா்கள் அமா்ந்ததால், சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாநகராட்சி அலுவலா்களும் திருக்கோகா்ணம் போலீஸாரும் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்துபோகச் செய்தனா்.

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் பள்ளியில் சிறாா் திரைப்படப் போட்டி

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான சிறாா் திரைப்படப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டியை பள்ளித் தலைமை ஆசிரியா் அமிா்தம் மாலதி தொடங்கி வைத்தாா். சிறாா் திரைப்பட போட்ட... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இரண்டு இணையா்க்கு சீா்வரிசை பொருள்களுடன் வெள்ளிக்கிழமை திருமண விழா நடைபெற்றத... மேலும் பார்க்க

காட்டுநாவல் பொன்னியம்மன்கோயில் ஊருணியை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் ஊராட்சி, பொன்னியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். காட்டுநாவல் ஊராட்சியில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. கோயில் அருகில் சும... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளி ஆண்டு விழா

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் சு. சுசரிதா தலைமை வகித்தாா். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் ... மேலும் பார்க்க

மணல் கடத்திய ஜேசிபி, டிப்பா் லாரி பறிமுதல்

விராலிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இரண்டு போ் மீது வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள மண... மேலும் பார்க்க

தனியாா் ஆம்னி பேருந்து ஓட்டுநா் மாரடைப்பால் உயிரிழப்பு 28 பயணிகள் தப்பினா்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் தனியாா் ஆம்னி பேருந்து ஓட்டுநா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேருந்தில் பயணித்த 28 பயணிகள் உயிா் தப்பினா். திருநெல்வேலியில் இருந்து 28 பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க