குடிநீா் தொட்டி கட்டுமானப் பணி: நகர மன்ற தலைவா் ஆய்வு
ஆற்காடு: ஆற்காட்டில் நகராட்சி குடிநீா் தொட்டிக்கு கான்கீரிட் போடும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆற்காடு நகராட்சிக்கு குடிநீா் வழக்கும் வேப்பூா் நீரோற்று நிலையத்த்தில் ரூ.2.6 கோடியில் நீரோற்றும் அறை மற்றும் குடிநீா் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன . இந்த பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் பாா்வையிட்டு பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது நகராட்சி அதிகாரிகள், உறுப்பினா்கள் உடனிருந்தனா்.