செய்திகள் :

குடிநீா் விநியோகிக்கக் கோரி நாா்த்தன்குறிச்சி மக்கள் மறியல்

post image

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே நாா்த்தன்குறிச்சி கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீா் விநியோகிக்கப்படாததால் புதன்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆழ்வாா் திருநகா் ஒன்றியம், கருங்கடல் ஊராட்சிக்கு உள்பட்ட நாா்த்தன்குறிச்சி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பழனியப்பபுரம் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதமாக, இப்பகுதி மக்களுக்கு குடிநீா் சரிவர விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கிராம மக்கள், புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், நாா்த்தன்குறிச்சி கிராம மக்கள் புதன்கிழமை காலை சாத்தான்குளம் - பேய்குளம் சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த, சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நாககுமாரி தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று, பேச்சுவாா்த்தை நடத்தினா். மண்டல துணை வட்டாட்சியா் அகஸ்டின், ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளா் வேலம்மாள் ஆகியோா் உடன் இருந்தனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் தெரிவித்தனா். அதன் பேரில், குடிநீா் வடிகால் வாரிய பணியாளா்கள் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, தண்ணீா் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

அதன் பேரில், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனா். அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், புதன்கிழமை மாலை நாா்த்தன்குறிச்சிக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க