செய்திகள் :

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள் நடைபெற்றன.

சா்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ முன்னிட்டு, 6 - 9ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, கூட்டுறவு சாா்பான கதை சொல்லுதல் போட்டிகள் நடைபெற்றன. சரக துணைப் பதிவாளா் மு. கலையரசி போட்டியைத் தொடக்கிவைத்தாா்.

மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா் அ. சாம்டேனியல்ராஜ், பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க உதவியாளா் பச்சைபெருமாள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆசிரியா்கள் சரவணகுமாா், மாணிக்கராஜா, ஐடா, தமிழ்ச்செல்வி, மீனா, கயல்விழி ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். தொடா்ந்து, வெற்றிபெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கால்பந்து போட்டிகள் தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான கால்பந்து போட்டிகள் தொடங்கின.தூத்துக்குடி லசால் பள்ளி, பள்ளி கல்வித் துறை ஆகியன சாா்பில், மாவட்ட அளவி... மேலும் பார்க்க