செய்திகள் :

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

post image

நமது நிருபர்

காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய விவகாரத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 8-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதற்கு ஆதரவாக கேரளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.

அதன் விவரம்: மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில்போட ஆளுநருக்கு அரசியல் சாசனம் எந்த ஓர் அதிகாரத்தையும் வழங்கவில்லை.

நியாயமான கால வரம்புக்குள் அல்லது குறுகிய காலத்துக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும்.

அரசியல் சாசனப் பிரிவு 143-இன் கீழ் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய குடியரசுத் தலைவரின் முடிவு என்பது தன்னிச்சையாகவோ, தனது விருப்புரிமையின்படியோ எடுத்தது அல்ல. ஏனெனில், தன்னிச்சையாக விளக்கம் கேட்க குடியரசுத் தலைவருக்கு அரசமைப்பில் அதிகாரம் வழங்கப்படவில்லை.

எனவே, குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியது என்பது மத்திய அமைச்சரவை மற்றும் அதன் தலைவரான பிரதமரின் ஆலோசனையின்படிதான்.

எனவே, குடியரசுத் தலைவரின் விருப்புரிமை உள்ளது என்ற பேச்சுக்கே இட மில்லை.

மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசுத் தலைவர் ரத்து செய்ய முடியாது. அவ்வாறு மீற முடியும் எனக் கருதுவது சரியானது அல்ல. எனவே, மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வாதங்கள் புதன்கிழமையும் தொடரும் என நீதிபதிகள் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத... மேலும் பார்க்க

மறைந்த தொழிலதிபரின் ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? நீதிமன்றத்தை நாடிய நடிகை!

நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் உயிரிழந்த நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம்? என குடும்பத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபரும் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான ... மேலும் பார்க்க

சிறையில் சூரிய ஒளியைகூட பார்க்க விடுவவில்லை... எனக்கு விஷம் கொடுங்கள்! நடிகர் தர்ஷன் கதறல்

சிறையில் சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிப்பதில்லை, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுங்கள் என்று நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன், பெங்களூரு மத்திய சிறையில் இர... மேலும் பார்க்க

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

மும்பையில் திரையரங்கினுள் படத்தின் கதையை முன்கூட்டியே சொல்லி, படத்தின் சுவாரசியத்தைக் குலைத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.புணேவில் ஹாலிவுட் பேய்ப் படமான கான்ஜுர... மேலும் பார்க்க

நேபாளத்தில் வன்முறை: விமான சேவைகள் நிறுத்தம் நீட்டிப்பு!

காத்மாண்டுவில் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவது நீடிக்கப்பட்டுள்ளதால் இன்று மாலை 6 மணி வரை விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் சமூக வலைதள ... மேலும் பார்க்க

ரேபரேலியில் ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று(புதன்கிழமை) ரேபரேலிக்குச் சென்றுள்ளார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு அவ்வப்போது ப... மேலும் பார்க்க