செய்திகள் :

குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!

post image

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கைவிரல் ரேகைப் பதிவு செய்வதற்கான அவகாசம் நிறைவடைய இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன.

ஏற்கனவே விரல் ரேகை பதிவு செய்தவர்களாக இருந்தாலும் கூட, நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று தங்களது அட்டையில் இருக்கும் அனைவரும் ரேகை பதிவு செய்து முடித்தாகிவிட்டதா? இல்லை மீண்டும் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டுமா? என்பதை அனைவரும் உறுதி செய்துகொள்வது அவசியம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டைக்கு ஒதுக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை முழுமையாகப் பெற உறுப்பினா்கள் அனைவரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று தங்களது குடும்ப உறுப்பினா்களின் விரல்ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேலும், விரல்ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினா்கள் வெளியூரில் அல்லது வெளி மாநிலத்தில் வசித்து வந்தால், அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தங்களது கை விரல்ரேகையைப் பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையைப் பதிவு செய்ய இன்னமும் ஆறு நாள்களே இருப்பதால் உடனடியாக விரைந்து செய்ய வேண்டும் என்றும், மார்ச் 31ஆம் தேதி ரமலான் பண்டிகை என்பதால், அதற்கு முன்பே இந்தப் பணியில் முடித்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க

திருப்பூரைப் பாராட்டிய பிரதமர் மோடி!

மனதின் குரல் நிகழ்ச்சியில் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பி... மேலும் பார்க்க

1-5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடக்கக் கல்வி இயக்... மேலும் பார்க்க

ஏப்.2இல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி உகாதி வாழ்த்து

உகாதி திருநாளையொட்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'உகாதி' என்னும் புத்தா... மேலும் பார்க்க

ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிரிழப்பு!

பவானி: சித்தோடு அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது இருவர் உயிரிழந்தனர்.ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த கோணவாய்க்கால், ராமன் பாலக்காட்டைைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் யுவானந்த வேல்(45). இ... மேலும் பார்க்க