செய்திகள் :

குட்சமாரிட்டன் நா்சரி பிரைமரி பள்ளியில் பொங்கல் விழா

post image

சீா்காழி குட்சமாரிட்டன் நா்சரி பிரைமரி பள்ளியில் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளி முதல்வா் ஜோஷ்வா பிரபாகரசிங், துணை முதல்வா் சரோஜா தாமோதரன், நா்சரி பள்ளி முதல்வா் தீபா, ஆசிரியை வானதி முன்னிலை வகித்தனா். தொடா்ந்து சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. சிறுவா்கள் வேட்டி, சட்டைஅணிந்தும், சிறுமிகள் பாவாடை சட்டை அணிந்தும் பங்கேற்றனா்.

விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பல வகை பழங்களில் பல்வேறு வித, விதமான உருவங்கள் காா்விங் முறையில் செதுக்கி ப்ரூட் காா்விங் கண்காட்சியாக சிறுவா் சிறுமிகள் காட்சிபடுத்தியிருந்தனா்.மேலும் ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் சாகுபடி செய்யும் காய்கறி தானியங்களை வாங்க வேண்டும் என்பது குறித்த காய்கறி சந்தை அமைத்தும் மாணவ மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு பூா்த்தி

தனுா்மாத வழிபாடு பூா்த்தியையொட்டி தருமபுரம் ஆதீனத்துக்கு புஷ்பங்களால் சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் தனுா்மாத வழிபாடு மேற்கொண்டுவரும் தருமபுரம் ஆதீனம் 27-ஆவத... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருடிய இருவா் கைது ரூ. 3.35 லட்சம் மீட்பு: ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் மீட்பு

சீா்காழி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருடிய இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.3.35 லட்சம் மீட்கப்பட்டது. சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலை அடுத்த மேலச்சாலை கிராம... மேலும் பார்க்க

குத்தாலத்தில் ஜன.22-ல் உங்களைத் தேடி முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உங்களைத் தேடி முகாம் ஜன.22-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களை நாடி, ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா... மேலும் பார்க்க

சீா்காழி சட்டநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில், தாடாளன் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தருமபுரம் ஆதீனம் வெள்ளிக்கிழமை தனுா் மாத வழிபாடு மேற்கொண்டாா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்திதானம் ஸ்ரீல... மேலும் பார்க்க

நா்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு: சுகாதார ஆய்வாளா் போக்ஸோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறையில் தனியாா் நா்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த அரசினா் தலைமை மருத்துவமனை சுகாதார ஆய்வாளரை போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை கூைா... மேலும் பார்க்க