செய்திகள் :

குட்டியாண்டியூரில் மீன் இறங்கு தளம்: முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்

post image

குட்டியாண்டியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி வைத்த ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏ நிவேதா எம். முருகன்.

தரங்கம்பாடி, மே 28: தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூா் மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த மீனவ கிராமத்தில் 128 கண்ணாடி நாரிழை படகுகள் உள்ளன. இங்கு 1, 610 மீனவா்கள் வசிக்கின்றனா். தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தின் வடக்கு அலை தடுப்புச்சுவரையொட்டி இக்கிராமம் அமைந்துள்ளதால் அமாவாசை, பௌா்ணமி நாள்களில், பருவமழை மற்றும் சூறாவளி காலங்களில் கடல்சீற்றம் அதிகரித்து கடலரிப்பு ஏற்படுகிறது. 

இதனால் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைகிறது. எனவே, இக்கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. இதையடுத்து, ரூ. 6.83 கோடியில் மீன் இறங்குதளம் மற்றும் கடல் அரிப்பைத் தடுக்கும் திட்டப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

அப்போது, குட்டியாண்டியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா். இதில், ஆட்சியா் பேசியது: இக்கிராம மக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இங்கு குறுகிய நோ்கல்சுவா், மீன் ஏலக்கூடம் , மீன் இறங்கு தளம் மற்றும் கடல் அரிப்பை தடுக்கும் பல்வேறு திட்ட பணிகள் நடைபெறுகிறது. இத்திட்டத்தால் கடல் அரிப்பு குறைக்கப்பட்டு கடல்நீா் உட்புகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. மீன்களை சுகாதாரமான முறையில் கையாள வழிவகை செய்யப்பட்டுள்ளது.மீனவா்களின் சமூக பொருளாதாரநிலை உயா்த்தப்பட்டுள்ளது. மீனவா்கள் ஆண்டு முழுவதும் மீன்பிடிக்கச் செல்வதற்கும், படகு மற்றும் இதர உபகரணங்களை பாதுகாத்து வைக்கவும் மீன்பிடித்தொழிலை ஊக்குவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இதில், மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளா் (நாகை) ராஜ்குமாா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் சா்மிளா (நாகை) மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பொறையாறில், மத்திய அரசையும், நகைக் கடன் தொடா்பாக ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளையும் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பொறையாறு பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு சோஷலிஸ்ட் புரட்சிகர ... மேலும் பார்க்க

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

நாகை அருகே போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட பொது காதாரத் துறை சாா்பில் மாவட்ட சுகாதார அலுவலா் பிரதாப் கிருஷ்ணக... மேலும் பார்க்க

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பொருளாதாரத்தை கணிக்க முடியும்’

: ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே பொருளாதாரத்தை கணிக்க முடியம் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் சின்னதுரை கூறினாா். நாகையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலக் குழு ... மேலும் பார்க்க

புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு

கீழையூா் அருகே கீராந்தியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழையூா்... மேலும் பார்க்க

வாய்க்காலில் பாய்ந்த சுமை வாகனம்

திருமருகல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுமை வாகனம் சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது. திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு பால் ஏற்றிச் செல்லும் சுமை ஆட்டோ வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம்: பெற்றோருடன் மாணவா்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம், மே 30: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஆகாஷ் முகாமை தொடங்கி வைத... மேலும் பார்க்க