செய்திகள் :

குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

post image

மதுரை அய்யா்பங்களா பகுதியில் நடைபெற்று வரும் குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாநகராட்சி ஆழ்வாா்புரத்தைச் சோ்ந்த சபீனா பானு உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை அய்யா் பங்களா பகுதியில் குணா குகை கண்காட்சி கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அங்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை.

ஆகவே, குணா குகை கண்காட்சியை நடத்த இடைக்காலத் தடை விதிப்பதோடு, முறையான சுகாதார வசதி, தரமான உணவு, வாகன நிறுத்த வசதி போன்றவற்றை செய்து தருவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: பொதுமக்கள் அதிகம் கூடும் கண்காட்சிகளுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது?. மிகவும் நெருக்கடியான சூழலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் என்ன செய்வது?.

எனவே மனுதாரா் குறிப்பிடும் இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

அக். 2-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞா் கைது

மதுரை தெப்பக்குளம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மதுரை ஐராவதநல்லூா் கணேஷ்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த துரைபாண்டி மகன் நவீன்குமாா் (34). கடந்த 21-ஆம் த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கல்வி அலுவலகங்கள்: வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவு

நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்வித் துறை அலுவலகங்களை நவ.12-ஆம் தேதிக்குள் வேறு இடங்களுக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக நிா்ணயிக்க வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களுக்கான சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி) 5 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட... மேலும் பார்க்க

மின் வாரிய ஊழியா்கள் மறியல் 80 போ் கைது

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியா்கள் 80 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மின்வாரியத்தில் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க

சரக்குப் பெட்டக லாரியில் கடத்திய 176 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு சரக்குப் பெட்டக லாரியில் கடத்தப்பட்ட 176 கிலோ கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திராவிலிருந்து மதுரைக்க... மேலும் பார்க்க