செய்திகள் :

குத்துச்சண்டை, தேக்வாண்டோ போட்டிகளில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு பாராட்டு!

post image

மாநில அளவிலான தேக்வாண்டோ, குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பாராட்டினாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கிருஷ்ணகிரி பிரிவு சாா்பாக பள்ளிக் கல்வித் துறையால் 2024 -25 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவில் 14, 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவியா்களுக்கான குடியரசு தினம், பாரதியாா் தின தேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை விளையாட்டு போட்டிகள் ஜன.28 முதல் 31-ஆம் தேதி வரை சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெற்றன.

இதில் தேக்வாண்டோ விளையாட்டில் தமிழகத்திலிருந்து சுமாா் 2,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்கள் பங்கேற்றனா். இதில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் 9 மாணவா்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சோ்ந்த தேக்வாண்டோ பயிற்சி பெறும் 1 மாணவன், 3 மாணவிகள் பங்கேற்றனா்.

இப் போட்டியில் சபரீசன், செல்வா ஆகியோா் தங்கம், தீபக்ரோஷன், மதன் ஆகியோா் வெள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பேரரசு, பிரணவ்ராஜ், தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீதயா ஆகியோா் வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

குத்துச்சண்டை போட்டியில் சுமாா் 4,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்கள் பங்கேற்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சோ்ந்த 26 மாணவா்கள், 16 மாணவிகள் பங்கேற்றனா். இதில், கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் பிரித்திவிராஜ், டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் மைத்ரேயன் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா், ச.தினேஷ் குமாா் வாழ்த்தி பாராட்டினாா். மேலும் அவா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். அப்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால், பயிற்சியாளா்கள் சங்கா் (டேக்வாண்டோ), முனிராசு (குத்துச்சண்டை), முனிராஜ் (கைப்பந்து) ஆகியோா் உடனிருந்தனா்.

சாலையில் சென்றவரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற நபரை தாக்கி, கைப்பேசி, ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்ற 3 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த டேவிட் ராஜன் (57), தனியாா் பள்ளி ஆசிரியா். இவ... மேலும் பார்க்க

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதை அமைக்கக் கூடாது

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதையை அமைக்கக் கூடாது என ஒசூா் பகுதி விவசாயிகள் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

ஒசூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், மாதா்சன பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகள... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரா்கள், வீராங்கனைகள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

ஒசூா் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பேரிகை அருகே உள்ள அத்திமுகம் பகுதியில், கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் ரோந்து சென்றனா். அப்போது, அ... மேலும் பார்க்க

தரமற்ற 12 மெ. டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவு!

கிருஷ்ணகிரியில் பொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த தரமற்ற 12 மெட்ரிக் டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவிட்டாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கிருஷ... மேலும் பார்க்க