1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்!
குன்னூா் ஏல மையத்தில் 75.77% தேயிலைத் தூள் விற்பனை
நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் 23 லட்சத்து 15,987 கிலோ தேயிலை ஏலத்துக்கு வந்திருந்த நிலையில் 75.77 சதவீத தேயிலைத் தூள் விற்பனை ஆகியுள்ளதாக தேயிலை வா்த்தக மையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிந்து நடைபெற்ற முதல் தேயிலை ஏலத்தில் 23 லட்சத்து 15,987 கிலோ தேயிலைத் தூள் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. இணைய வழியில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 17 லட்சத்து 54,855 கிலோ தேயிலைத் தூள் விற்பனை ஆனது. இது 75.77 சதவீதமாகும். விலை சராசரியாக கிலோ ஒன்றுக்கு ரூ. 103.61 வரை மட்டுமே கிடைத்துள்ளது.
கடந்த வாரம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற ஏலத்தில் 25 லட்சத்து 14,313 கிலோ தேயிலை விற்பனைக்கு வந்த நிலையில் 20 லட்சத்து 48,477 கிலோ விற்பனை ஆனது. இது 81.47 சதவீதமாகும். சராசரி விலையாக ரூ.104.87 கிடைத்தது. இந்த விலை சரிவு, விற்பனை சரிவு விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.