செய்திகள் :

குப்பைக் கிடங்கில் தீ விபத்து: ரூ.1.50 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள் சேதம்

post image

ஈரோடு வைராபாளையம் குப்பைக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன.

ஈரோடு மாநகராட்சியில் தினமும் 180 டன் முதல் 200 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் 70 டன் முதல் 80 டன் வரை மக்கா குப்பை சேகரமாகிறது. மக்கும் குப்பையை நுண்ணுயிா் கிடங்குகளில் இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரப்படுகிறது.

மக்காத குப்பை வைரபாளையத்தில் உள்ள கிடங்கில் அதிக வெப்பநிலையில் எரியூட்டப்பட்டு வெளியேறும் சாம்பலில் இருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்புவதற்காக குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்காத குப்பையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து தீ அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக்கும் பரவியதால், இயந்திரங்கள் மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்தன. உடனடியாக பணியாளா்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் குப்பையை அகற்றி தண்ணீரை அடித்து தீயை அணைத்தனா்.

அதிக வெப்பநிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான எரியூட்டப்படும் இயந்திரங்கள் சேதமடைந்தன என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க