செய்திகள் :

குமரி மாவட்ட தோட்டத் தொழிலாளா்கள் நெலமலையில் ஆா்ப்பாட்டம்

post image

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட தோட்டத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியூ) வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க பொதுச் செயலா் எம்.வல்சகுமாா் தலைமை வகித்தாா். தலைவா் பி. நடராஜன் முன்னிலை வகித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு வட்டம், சுருளகோடு கிராமத்தில் முக்கம்பாலை பகுதியில் உள்ள சாந்தோம் ரப்பா் லேட்டக்ஸ் தொழிற்கூடத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு சரியான ஊதியம், பஞ்சப் படி, தேசிய விடுப்பு ஊதியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், பொன்னையன், ஷிபு, பினு, தினேஷ், மகாராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்14ல்ழ்ா்ற்

பாளை.யில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட தோட்டத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. மதிதா இந்துக் கல்லூரி மற்றும் ஈரநிலம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சி... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024 ஐ ரத்து செய்ய வேண்டும், 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படு... மேலும் பார்க்க

புலிகள் கணக்கெடுப்பு: களக்காடு தலையணைக்கு செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக களக்காடு வனச் சரகா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த இளைஞரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா். தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன்(20). இவருக்... மேலும் பார்க்க

சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பல்பு! நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த சிறிய பல்பை அகற்றி சாதனை படைத்துள்ளனா். தூத்துக்குடியைச் சோ்ந்த 3 வயது சிறுவன் விக... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே கொழுமடை புதுகாலனியைச் சோ்ந்த ஆண்டி மனைவி லட்சுமி (60), கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க