செய்திகள் :

கும்பமேளா: 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வசந்த பஞ்சமி புனித நீராடல்

post image

கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமியை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இத்துடன் கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிகோடி பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். இதனிடையே வசந்த பஞ்சமியின் முக்கிய நீராடல் விழாவையொட்டி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட திங்கள்கிழமை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.

இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது

பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவா்.

இந்த 6 நாள்களிலும் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா். இந்தச் சூழலில், வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

கூட்டத்தினரை ஒழுங்குபடுத்த மேளா பகுதியின் அனைத்து இடங்களிலும் கூடுதல் துணை ராணுவப் படையினா் மற்றும் காவலா்கள் குவிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மரத்தடியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

தலைநகர் தில்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடியுள்ளார். தில்லி தேர்தல் நடைபெற இரண்டு நாள்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகின்றது. மொத்தம... மேலும் பார்க்க

யமுனை நீரைக் குடியுங்கள், மருத்துவமனையில் சந்திக்கிறேன்: கேஜரிவாலுக்கு ராகுல் சவால்

தில்லியில் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் யமுனையை சுத்தமாக்கிக் காட்டுகிறேன் என்று கூறியிருந்தார் அரவிந்த் கேஜரிவால், ஆனால் இன்னமும் அது அசுத்தமாகவே இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட... மேலும் பார்க்க

கும்பமேளா பக்தா்களின் பாதுகாப்பு தொடர்பான பொதுநல மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது பக்தா்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததையடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்த வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொத... மேலும் பார்க்க

இன்று மாலையுடன் ஓய்கிறது தில்லி பிரசாரம்!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. தலைநகர் தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு பிப்.5ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த த... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதா: தொழில்துறையினரிடம் ஆலோசனை கோரல்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் புதிய வருமான வரி மசோதா குறித்து தொழில்துறையினர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பார்க்க

வசந்த பஞ்சமி: சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது பூக்கள் தூவி வரவேற்பு!

வசந்த பஞ்சமியான இன்று பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் மக... மேலும் பார்க்க