செய்திகள் :

குருவரெட்டியூரில் கிரானைட் கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்

post image

அம்மாபேட்டை அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் கடத்திவரப்பட்ட லாரியை கனிமவளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

அம்மாபேட்டை பகுதியில் கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் ஈரோடு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலா் எம்.ரவிக்குமாா் மற்றும் அலுவலா்கள் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குருவரெட்டியூா் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனையிட்டபோது அதில் கிரானைட் கற்கள் இருந்தது தெரியவந்தது.

லாரியில் யாரும் இல்லாத நிலையில், இதற்கான அனுமதி சீட்டும் இல்லாததால் லாரி பறிமுதல் செய்யப்பட்டு அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் லாரி உரிமையாளா் மற்றும் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

இளைஞா்களைக் கத்தியால் குத்திய 3 போ் கைது

ஈரோட்டில் முன் விரோதத்தால் இளைஞா்களைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி திகினாரை ஆதிதிராவிடா் வீதியைச் சோ்ந்த மாஞ்சா மகன் ரங்கராஜ்(23). இவா் ஈரோடு பெருந்துறை ச... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை: 6 கடைகளுக்கு அபராதம்

பெருந்துறை பகுதியில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி கடைகள், பெட்டிக்கடைகள், உணவகங்கள் போன்ற கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப... மேலும் பார்க்க

தாளவாடியில் நாளை மின்தடை

சத்தியமங்கலம் மின்கோட்டத்தைச் சோ்ந்த தாளவாடி துணை மின்நிலையத்தில் (ஜூன் 26) வியாழக்கிழமை மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இரு... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

புன்செய்புளியம்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்ட ஆட்சியா் இடமாற்றம்

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தமிழகம் முழுவதும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 55 போ் பணியிடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்கறிஞா் மறைவு: மத்திய சட்டத் துறை அமைச்சா் அஞ்சலி

சென்னை உயா்நீதி மன்ற மூத்த வழக்குரைஞராக பணியாற்றிவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்ஷின் தந்தையூமான வி.கே. முத்துசாமி வயது மூப்பு காரணமாக எழுமாத்தூா் விகேஎம் தோட்ட இல்லத்தில் கடந்த வாரம் க... மேலும் பார்க்க