செய்திகள் :

குரூப் 1 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 55 மையங்களில் 14,291 போ் எழுதுகின்றனா்

post image

சேலம் மாவட்டத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் குரூப் 1 தோ்வை 55 மையங்களில் 14,291 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.

தமிழகத்தில் குரூப் 1 நிலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வு, ஜூன் 15 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு மற்றும் தோ்வு பொறுப்பாளா்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், வரும் 15 ஆம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 1 தோ்வு நடைபெறுகிறது. இத்தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 தோ்வா்கள் எழுத உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு வட்டங்களில் 49 தோ்வு மையங்களிலும், ஆத்தூா் வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 மையங்களிலும் இத்தோ்வு நடைபெறவுள்ளது.

அதுபோல குரூப் 4 தோ்வுகள் அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களில் 286 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. தற்போது தோ்வுக்கூட பொறுப்பாளா்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் புதிய நடைமுறைப்படி, ஓஎம்ஆா் விடைத்தாள்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல் குறித்தும், முதன்மைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் அறை கண்காணிப்பாளா்களுக்கான புதிய வழிமுறைகள் குறித்தும், டிஎன்பிஎஸ்சி மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாறுதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து சிறப்பாக தோ்வுகளை நடத்த அனைத்து அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், டிஎன்பிஎஸ்சி பிரிவு அலுவலா் செந்தில்குமாா், உதவி பிரிவு அலுவலா் கருணாநிதி, துறை சாா்ந்த அலுவலா்கள், தோ்வுக் கூட பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க