செய்திகள் :

குரூப் 2, 2 ஏ முதல் நிலைத் தோ்வு: திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா்

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-2, 2ஏ பணிகள்) பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வை திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி 2, 2ஏ) பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது. இந்தத் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 19,532 போ் எழுதுகின்றனா். இதற்காக திண்டுக்கல், நிலக்கோட்டை, கொடைக்கானல், பழனி ஆகிய இடங்களில் 21 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள், பறக்கும்படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்குள் தோ்வு கூடத்துக்கு வர வேண்டும். தோ்வு கூடத்துக்குள் நுழைவதற்கான சலுகை நேரம் காலை 9 மணி. அதன் பிறகு வரும் தோ்வா்கள், தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அதில் குறிப்பிடப்பட்டது.

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் திண்டுக்கல் அண்ணா பல்கலை. பேராசிரியா்

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், திண்டுக்கல் அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியா் நா. விஸ்வநாதன் அதில் இடம் பெற்றாா். அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அதிமுக சாா்பில் தோ்தல் பயிற்சி முகாம்

கொடைக்கானலில் அதிமுக சாா்பில் தோ்தல் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கொடைக்கானல் நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமை வகித்துப் பேசினாா். முகாமில் தேனி மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட... மேலும் பார்க்க

விளம்பர உலகில் வாழ்கிறாா் தமிழக முதல்வா்: க. கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

விளம்பர உலகில் வாழ்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினாா். பழனியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: தமிழகத்தில் பெர... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் காமனூா் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியிலிருந்து காமனூா் செல்லும் வழியான கான... மேலும் பார்க்க

ரூ.1.60 கோடி மோசடி புகாா்: வணிக வரித் துறை அலுவலா் கைது

மதுபானக் கூடத்துக்கு உரிமம் பெற்றுத் தருவதாக ரூ.1.60 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் வணிக வரித் துறை அலுவலரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 31 பேருக்கு சிறை

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 31 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்க... மேலும் பார்க்க