குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க மே 24 கடைசி
குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி நாளாகும்.
கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வனக்காப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்களில் 3,935 இடங்கள் காலியாக இருந்தன.
இந்த பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
விருப்பமுள்ள தோ்வா்கள் தோ்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நேரத்தில் விண்ணப்பம் செய்வதை தவிா்க்க, இப்போதே விண்ணப்பிக்கலாம் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
இணையதளம் வழியாக மே 24 நள்ளிரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்ய மே 29 முதல் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.